விட்டமின் D
ஓய்வூதியத்தின் பின்னரான காலப்பகுதி அதாவது 60-65வயதிற்கு பின்னரான காலப்பகுதியில் எங்கட தாத்தாமார் அடிக்கடி தவறி விழுவதை நாம் அவதானித்திருக்கிறோம் இதற்கு என்ன காரணம் தெரியுமா…?
விட்டமின் D குறைபாடே இந்த தவறிவிழுவதற்கு மிக முக்கிய காரணம்என University Hospital Zurich மற்றும் Harvard School of Public Health பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளது.
65வயது கடந்ததன் பின்பு கட்டாயமாக விட்டமின் D இனை அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக 17.5மைக்ரோகிராம் விட்டமின் D ஆனது தினமும் அவர்களது உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பது அவசியம் என்கிறது அவ் ஆய்வறிக்கை.
தற்போதய காலப்பகுதியினை எடுத்துக்கொண்டால் இவ்வாறு முதியவர்கள் அடிக்கடி வீடுகளில் மாத்திரமல்ல வீதிகளிலும் தவறி விழுவது பிரித்தானியாவில் அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இதன் மூலமாக அவர்கள் வீதி விபத்திற்கும் உள்ளாவதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் osteoporotic (என்புருக்கி நோய்) மூலமா பிரித்தானியாவில் மாத்திரம் இறந்தவர்களின் எண்ணிக்கையினை எடுத்துக்கொண்டால் அது 14000ஆக அமைந்திருக்கின்றது. இதற்கும் முக்கிய காரணம் இவ் விட்டமின் D குறைபாடே…
எனவே இவ்ஆய்வறிக்கையின் பின்னராவது மக்கள் மத்தியில் விட்டமின் D பற்றிய விழிப்புனர்வு ஏற்படுமென இவ் ஆய்வறிக்கையினை வெளியிட்ட பல்கலைக்கழகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மிகப்பெரிய பேர்கர்
பிரித்தானியாவிலேயே நீளம் கூடியதாகவும் அத்துடன் கொழுப்பு கூடியதானதுமான burger இப்பொழுது விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
படத்தைப்பார்த்தாலே உடனடியாக சாப்பிடத்தேண்றுதா இல்லயா..? யாருக்குத்தான் தோண்றாது..?
இதன் நீளம் என்னதெரியுமா? 6அங்குலம்…! அதனோடு இதன் கலோரியும் சாதாரண burger இனைவிட 40மடங்கு அதிகமாம். அப்படியென்றால் 2645கலோரி…!
சரி அப்படி என்னதான் உள்ள வச்சு செய்திருக்காங்க தெரியுமா?
இதுக்குள்ள நான்கு beefburgers, எட்டு bacon, எட்டு slices of cheese, பன்னிரெண்டு onion rings, மூண்று வகையான sauces, அத்தோட சலாட்டும் சேர்த்து செஞ்சிருக்காங்க.
இதற்கான விலையாக 10பவுண்ஸ் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதும் யாராவது ஒரே மூச்சில் சாப்பிட்டு முடிச்சால் அவர்களிற்கு ஒரு Diet Coke இலவசமாம்.
ஓக்கே நீங்க ரெடியா……………?

முக்கியமான பின்குறிப்பு என்னவெண்றால் இதைத்தயாரித்தவரே சொல்லியிருக்கார் நான்கூட இதனை ஒரே மூச்சில் சாப்பிடவில்லை அது முடியாத காரியம் எண்டு…!
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை…!
8.7 கிலோ எடையுடைய குழந்தையினை பெற்றெடுத்துள்ளார் இந்தோனேசிய பெண்மணி ஒருவர்…

இந்தோனேசியாவில் இதுவரை இருந்து வந்த அதிக எடையுடைய குழந்தை சாதனையினை கடந்த திங்கட்கிழமை பிறந்த ஆண் குழந்தை ஒன்று மிஞ்சியுள்ளது.
8.7 கிலேகிராம் அதாவது 19.2 பௌண்ட் நிறையுடையதாக பிறந்துள்ள புதிய குழந்தையின் நிறை பதியப்பட்டுள்ளது.
இந்தோனேசிய வரலாற்றில் இதுவரை 2007ம் ஆண்டு பிறந்த 6.9கிலோகிராம் நிறையுடைய குழந்தைதான் அதிக நிறையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனை நிலவிவந்த நிலையில் அந்த சாதனையினை முறியடிக்கும் வகையில் இப் புதிய குழந்தையின் நிறை அமைந்துள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இக்குழந்தை பிறக்கையில் 62சென்றி மீட்டர் நீளமுடையதாக இருந்ததாம், கடந்த திங்கட்கிழமை இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திரா பிராந்தியத்தில் உள்ள பொது மருத்துவமனை ஒன்றில்தான் இக்குழந்தை பிறந்துள்ளது.
எடை உயர்வு காரணமாக சிசேரியன் முலமாகத்தான் வைத்தியர்கள் குழந்தையினை வெளியே எடுத்துள்ளனர்.இந்த மகப்பேற்றினை மேற்கொண்ட வைத்தியர் கூறுகையில் குழந்தையின் கால்கள் மிகபருமனாக காணப்பட்டதால் தாங்கள் பலத்த சிரமத்தின் மத்தியில்தான் தாயின் கருப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுத்ததாக கூறினார்.
குழந்தை ஆரோக்கியமாக உள்ள போதும் ஆரம்பத்தில் சுவாசத்திற்கு சிரமப்பட்டதாகவும் இதனால் தாங்கள் செயற்கை சுவாசம் வழங்கியதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர், அவர்கள் மேலும் தெரிவிக்கையில் குழந்தை அசாதாரண வளர்ச்சியுடன் இருப்பதனால் நிமிடத்திற்கு நிமிடம் பாலூட்டவேண்டி இருப்பதாகவும், அத்துடன் குழந்தையின் அழுகை ஒலி அதிக சத்தமுடையதாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்னதான் குளந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ள போதும் குழந்தையின் தாயை எடுத்துக்கொண்டால் குழந்தையின் தாய் அனி 41 வயது நிரம்பியவராகவும் அத்துடன் சக்கரை வியாதி உள்ளவராகவும் காணப்படுகின்றார். இதனால் வைத்தியர்கள் தெரிவிக்கையில் குழந்தையினை கவனமாக பராமரிக்கும்படி அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
09.09.09
இண்றைய நாள் ஒன்பதாம் திகதி ஒன்பதாம் மாதம் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு.
ஒன்பது ஒன்பது ஒன்பது இந் நாளின் தனி எண், கூட்டு எண் எல்லாமே ஒன்பதாகவே அமைந்திருக்கின்றது. அத்துடன் இன்னுமொரு சிறப்பு யாதெனின் இன்றய நாள் இந்த வருடத்தின் 252ஆவது நாள் (2+5+2 = 9) அதன் கூட்டுத்தெகை கூட ஒன்பதாகவே அமைந்திருக்கின்றது.
இவ்வாறாக அணைத்தும் ஒன்பதாக அமையும் நாள் ஒன்றினை நாங்கள் சந்திக்க வேண்டும் எனின் 992 ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் அதாவது 3001 இல்தான் இவ் அதிசய தினம் மீண்டும் வரும்.
பிரித்தானியாவின் பிரபல்யமான இரண்டு செல்லிட தொலைபேசி சேவைகளின் இணைப்பு பற்றிய அறிவித்தல் வெளியீடு….
செல்லிட தொலைபேசிச்சேவை ஜாம்பவன்களான Orange மற்றும் T-Mobile நிறுவனங்கள் தங்களுக்குள் இணைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் முதல் தரமான சேவையினை வழங்க தீர்மானித்துள்ளன.
இந்த அறிவித்தலினை இரண்டு நிறுவனங்களும் நேற்றயதினம் (08.09.09) கூட்டாக விடுத்துள்ளன.
பிரான்ஸ் டெலிகொம் இற்கு செந்தமான Orangeம், ஜேர்மன் டெலிகொம் இற்கு செந்தமான T-Mobileலும் பிரித்தானியா செல்லிட தொலைபேசிசேவை வர்த்தகத்தில் முறையே மூண்றாம் மற்றும் நான்காம் இடத்தில் இருந்து வந்தமை நீங்கள் அறிந்ததே, இவ் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக மொத்தம் 28.4 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன இது மொத்த சனத்தொகையில் 37 சதவீதம் என்பதும் கூறிப்பிடதக்கது.
இவ்வாறாக இரு நிறுவனங்களும் இணைவதன் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கும், சிறந்த வாடிக்கையாளர் செவையினை வளங்கவும் மற்றும் சிறந்த வலையமைப்பு சேவையினை வழங்கவும் தீர்மான்த்துள்ளன.
இவ்வாறாக மக்களிற்கு நற்செய்தியினை வழங்கிய போதும் இவ் இரண்டு நிறுவனங்களின் முக்கிய கூறிக்கோளாக இருப்பது தங்கள் வேலையாட்களை குறைப்பதே, இணைப்பின் மூலம் தங்கள் வேலையாட்களை 19000ஆக குறைக்க இவை தீர்மானித்துள்ளன.
இவ் இணைப்பிற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் வரும் ஒக்டோபர் மாதம் கைச்சாத்திடவுள்ளன. ஆயினும் 2010இன் ஆரம்பத்திலிருந்துதான் ஒன்றாக செயற்பட காத்திருக்கின்றன.
தற்போதய நிலையில் பிரித்தானியாவில் முதல்நிலையில் விளங்கும் ஸ்பெயின் டெலிகொமிற்கு செந்தமான O2மற்றும் இரண்டாம் நிலையிலிருக்கும் Vodafoneஆகியவற்றை இவ் இணைப்பு பின் தள்ளும் என எதிர்பாக்கப்படுகிறது.
அணைவருக்கும் வணக்கம்
இணையதளத்தில் எனக்கும் பதிவுகள் இடவேண்டும் என்ற ஆசையில்…